கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையிட்டுள்ளார். கோவை கொடிக்கம்ப வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரியதையடுத்து, உரிய ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு தெரிவித்தது.